தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' |

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவர் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த 'அகண்டா' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அகண்டா 2ம் பாகம் உருவாகியுள்ளது. '14 ரீல்ஸ் ப்ளஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் நேற்று டிசம்பர் 5ம் தேதியன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பைனான்ஸ் கிளியர் செய்யாததால் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உதவும் விதமாக பாலகிருஷ்ணா அவரது சம்பள தொகையில் இருந்து ரூ. 7 கோடியும், போயப்பட்டி ஸ்ரீனு அவரது சம்பளத்தில் இருந்து ரூ.4 கோடியும் விட்டுக் கொடுத்துள்ளனர். விரைவில் இந்த பிரச்னையை சுமுகமாக தீர்த்து அடுத்த கட்டமாக இப்படத்தை வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அல்லது 25ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர விநியோகஸ்தர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.