‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'விடுதலை 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
டிரைலரில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள் உடனடியாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. டிரைலரின் முடிவில் விஜய் சேதுபதி பேசுவது போல ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது,” என்று பேசுகிறார்.
அந்த வசனம் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பதாக உள்ளதென நேற்று டிரைலர் வெளியான உடனேயே பலரும் கமென்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சமூக வலைதளங்களில் அந்த வசனத்தை அப்படியே பதிவு செய்து, விஜய்யை பலரும் விமர்சித்தார்கள். அதைக் கண்டு பொறுக்க முடியாத விஜய் ரசிகர்கள் பதிலுக்கு வெற்றிமாறன் பற்றி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பொதுவாக தனது திரைப்படங்களில் விஜய்தான் 'பன்ச்' வசனம் பேசுவார். அவர் அரசியலில் இறங்கியதும் அவரை விமர்சித்தும் 'பன்ச்' வசனம் வந்துவிட்டதே என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.