ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
ஒரு வெற்றிப் படத்தில் நடித்த பிறகும் காணாமல் போன நடிகர், நடிகைகள் நிறைய உண்டு. இது அவ்வப்போது சினிமாவில் நடக்கும் ஒரு விஷயம். அப்படியான ஒன்று 1939ம் ஆண்டே நிகழ்ந்திருக்கிறது. மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வெற்றிப் படங்களில் ஒன்று 'சந்தனத்தேவன்'. டி.ஆர்.சுந்தரம் தயாரித்த இந்த படத்தை எஸ்.நோட்டானி இயக்கி இருந்தார். ஆர்.நாயுடு இசை அமைத்திருந்தார்.
இது ஒரு கற்பனையான சரித்திர கதை. இதில் ஜி.எம்.பஷீர் என்பவர் நாயகனாகவும், பி.பானுமதி என்பவர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர் பின்னாளில் வெற்றிகரமாக வலம் வந்த பானுமதி அல்ல. இவர்களோடு எம்.ஆர்.ராதா, பி.எஸ்.ஞானம், யூ.ஆர்.ஜீவரத்னம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இதில் நாயகன், நாயகியாக நடித்த ஜி.எம்.பஷீரும், நாயகியாக நடித்த பானுமதியும் இதற்கு பிறகு நடித்ததாக தகவல்கள் இல்லை. இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் நடித்த நடிகர், நடிகைகளை விட இவர்கள் அழகாக இருந்தார்கள். இந்த படத்தில் நடித்த எம்.ஆர்.ராதாவும், யூ.ஆர்.ஜீவரத்தினமும் பின்னாளில் வெற்றிகரமான திரைக் கலைஞர்களானார்கள்.