‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ஒரு வெற்றிப் படத்தில் நடித்த பிறகும் காணாமல் போன நடிகர், நடிகைகள் நிறைய உண்டு. இது அவ்வப்போது சினிமாவில் நடக்கும் ஒரு விஷயம். அப்படியான ஒன்று 1939ம் ஆண்டே நிகழ்ந்திருக்கிறது. மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வெற்றிப் படங்களில் ஒன்று 'சந்தனத்தேவன்'. டி.ஆர்.சுந்தரம் தயாரித்த இந்த படத்தை எஸ்.நோட்டானி இயக்கி இருந்தார். ஆர்.நாயுடு இசை அமைத்திருந்தார்.
இது ஒரு கற்பனையான சரித்திர கதை. இதில் ஜி.எம்.பஷீர் என்பவர் நாயகனாகவும், பி.பானுமதி என்பவர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர் பின்னாளில் வெற்றிகரமாக வலம் வந்த பானுமதி அல்ல. இவர்களோடு எம்.ஆர்.ராதா, பி.எஸ்.ஞானம், யூ.ஆர்.ஜீவரத்னம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இதில் நாயகன், நாயகியாக நடித்த ஜி.எம்.பஷீரும், நாயகியாக நடித்த பானுமதியும் இதற்கு பிறகு நடித்ததாக தகவல்கள் இல்லை. இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் நடித்த நடிகர், நடிகைகளை விட இவர்கள் அழகாக இருந்தார்கள். இந்த படத்தில் நடித்த எம்.ஆர்.ராதாவும், யூ.ஆர்.ஜீவரத்தினமும் பின்னாளில் வெற்றிகரமான திரைக் கலைஞர்களானார்கள்.