ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
ஒரு வெற்றிப் படத்தில் நடித்த பிறகும் காணாமல் போன நடிகர், நடிகைகள் நிறைய உண்டு. இது அவ்வப்போது சினிமாவில் நடக்கும் ஒரு விஷயம். அப்படியான ஒன்று 1939ம் ஆண்டே நிகழ்ந்திருக்கிறது. மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வெற்றிப் படங்களில் ஒன்று 'சந்தனத்தேவன்'. டி.ஆர்.சுந்தரம் தயாரித்த இந்த படத்தை எஸ்.நோட்டானி இயக்கி இருந்தார். ஆர்.நாயுடு இசை அமைத்திருந்தார்.
இது ஒரு கற்பனையான சரித்திர கதை. இதில் ஜி.எம்.பஷீர் என்பவர் நாயகனாகவும், பி.பானுமதி என்பவர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர் பின்னாளில் வெற்றிகரமாக வலம் வந்த பானுமதி அல்ல. இவர்களோடு எம்.ஆர்.ராதா, பி.எஸ்.ஞானம், யூ.ஆர்.ஜீவரத்னம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இதில் நாயகன், நாயகியாக நடித்த ஜி.எம்.பஷீரும், நாயகியாக நடித்த பானுமதியும் இதற்கு பிறகு நடித்ததாக தகவல்கள் இல்லை. இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் நடித்த நடிகர், நடிகைகளை விட இவர்கள் அழகாக இருந்தார்கள். இந்த படத்தில் நடித்த எம்.ஆர்.ராதாவும், யூ.ஆர்.ஜீவரத்தினமும் பின்னாளில் வெற்றிகரமான திரைக் கலைஞர்களானார்கள்.