‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், கடந்த மாதம் 27ம் தேதி விக்ரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் விக்ரவாண்டியில் தான் மாநாடு நடத்துவதற்கு தங்களது விளைநிலங்களை கொடுத்து உதவிய அனைத்து விவசாயிகளையும் நேற்று சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய். அதோடு அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தும் உபசரித்து இருக்கிறார். மேலும், மாநாடு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகளையும் இந்த நிகழ்ச்சியின்போது அழைத்து உபசரித்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய்.




