படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், கடந்த மாதம் 27ம் தேதி விக்ரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் விக்ரவாண்டியில் தான் மாநாடு நடத்துவதற்கு தங்களது விளைநிலங்களை கொடுத்து உதவிய அனைத்து விவசாயிகளையும் நேற்று சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய். அதோடு அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தும் உபசரித்து இருக்கிறார். மேலும், மாநாடு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகளையும் இந்த நிகழ்ச்சியின்போது அழைத்து உபசரித்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய்.