காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் 'ஆடுஜீவிதம்' என்கிற திரைப்படம் வெளியானது. பல வருடமாக தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் தாமதமாக வெளியானாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைத்ததன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள திரை உலகிற்கு திரும்பி இருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்தில் பாடலும் பின்னணி இசையும் பலராலும் பாராட்டப்பட்டன.
இந்த நிலையில் தற்போது 2024ம் வருடத்திற்கான இசை விருதுகளில் உயரிய விருதாக பார்க்கப்படும் ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா அவார்ட்ஸ் (எச்.எம்.எம்.அ) விருது நிகழ்ச்சிக்காக இந்த படத்தில் இடம் பெற்றிருந்த 'பெரியோனே' என்கிற பாடல், சிறந்த பாடல் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டது. அதேபோல், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை என்கிற பிரிவில் பின்னணி இசைக்காகவும் என இரண்டு பிரிவுகளில் இந்த படம் நாமினேட் செய்யப்பட்டது.
இதில், ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் இயக்குநர் பிளஸ்சி பெற்றுக் கொண்டார்.