லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் |

அமரன் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23-வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் புறநானூறு என்ற இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கப் போகிறார். இந்த நேரத்தில் சுதா இயக்கத்தில் அவர் நடிக்கும் புறநானூறு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் இதேபடத்தில் வில்லனாக நடிக்க விஷாலிடத்திலும் பேச்சுவார்த்தை நடப்பதாக இன்னொரு தகவலும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அது குறித்து விஷாலிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. அவர் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார் விஷால்.




