ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
அமரன் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23-வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் புறநானூறு என்ற இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கப் போகிறார். இந்த நேரத்தில் சுதா இயக்கத்தில் அவர் நடிக்கும் புறநானூறு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் இதேபடத்தில் வில்லனாக நடிக்க விஷாலிடத்திலும் பேச்சுவார்த்தை நடப்பதாக இன்னொரு தகவலும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அது குறித்து விஷாலிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. அவர் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார் விஷால்.