காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
அமரன் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23-வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் புறநானூறு என்ற இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கப் போகிறார். இந்த நேரத்தில் சுதா இயக்கத்தில் அவர் நடிக்கும் புறநானூறு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் இதேபடத்தில் வில்லனாக நடிக்க விஷாலிடத்திலும் பேச்சுவார்த்தை நடப்பதாக இன்னொரு தகவலும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அது குறித்து விஷாலிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. அவர் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார் விஷால்.