பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. மாறுபட்ட காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்தநிலையில் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் 'இரும்புக்கை மாயாவி' படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், ''மாநகரம் படத்திற்கு முன்பே சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்க திட்டமிட்டார் எனது நண்பரான லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் நானும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. என்றாலும் அந்த படத்தை சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக இயக்குவார். அப்போது அதில் சூர்யாவுடன் இணைந்து ஏற்கனவே நடிக்க இருந்த அதே வேடத்தில் நானும் கண்டிப்பாக நடிப்பேன்,'' என்று தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.