ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் படம் 300 கோடி வசூலித்து தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ், பவன் தாஸ் என்ற இரண்டு மகன்களும் உள்ளார்கள்.
இவர்களில் முதல் மகன் குகன்தாஸ் குறித்து ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறும்போது, ''என் மகனுக்கு இனிப்பு பொருட்கள் சுத்தமாக பிடிக்காது. ஒரு முறை ஐஸ்கிரீம் ஊட்டி விட்டபோது அழுதுவிட்டான். இன்னும் சொல்லப்போனால் பிறந்த நாளில் கேக் வெட்டும் போது கூட அவன் இனிப்பு சாப்பிடுவதில்லை. அதே சமயம் காரமான உணவு என்றால் விரும்பி சாப்பிடுவான். அதனால் என் மகனுக்கு பிடித்தமான கார உணவுகளைதான் வாங்கிக் கொடுத்து வருகிறேன்,'' என்கிறார் சிவகார்த்திகேயன்.