அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ரங்கூன் படத்தை அடுத்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த இந்த படம் இதுவரை 300 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காமெடி கலந்த காதல் மற்றும் குடும்ப கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயனை இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இந்த அமரன் படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியபோது பல காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் எடிட் செய்து முடித்த பிறகு தான் அது போன்ற காட்சிகளை இந்த படத்தில் வைத்தால் சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போல் ஆகிவிடும். அதனால் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை குறித்த கதை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தோன்றியதால் அந்த காமெடி காட்சிகளை நீக்கிவிட்டேன். அப்படி நான் செய்ததினால் தான் முகுந்த் வரதராஜனின் பிரச்னைகள், அவரது குடும்பத்தாரின் துயரங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அந்த காமெடி காட்சிகளை நீக்கியதால்தான் சிவகார்த்திகேயனும் ஆக்சன் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். இல்லையென்றால் அவருடைய வழக்கமான படங்களில் இதுவும் ஒன்றாகதான் இருந்திருக்கும் என்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.