எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
என்.சந்திரா இயக்கத்தில், லட்சுமிகாந்த் பியாரேலால் இசையமைப்பில் அனில் கபூர், மாதுரி தீட்சித், அனுபம் கெர், சங்கி பாண்டே, மந்தாகினி மற்றும் பலர் நடிப்பில் 1988ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளிவந்த படம் 'தேசாப்'. 80களில் வெளிவந்த ஹிந்தி படங்களில் மிகப் பெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்தது.
பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக வந்த படம் வட இந்தியாவைத் தவிர, தென்னிந்திய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. மாதுரி தீட்சித் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருடைய நடனத்தில் அமைந்த 'ஏக் தோ தீன்' பாடல்தான் இந்தப் படத்தை பெரும் அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கக் காரணமாக அமைந்தது.
படத்தின் 36வது ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து படத்தின் நாயகி மாதுரி தீட்சித், அப்படத்தின் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்து, “இன்று 'தேசாப்' படத்தின் 36வது ஆண்டு தினம். இந்தப் படம் என் இதயத்தில் ஒரு சிறப்பைப் பிடித்த ஒன்று. உங்களது தொடர்ச்சியான பாராட்டுக்கள் எனக்கு நிறைய புரிய வைக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகும் 'ஏக் தோ தீன்' பாடலும் மோகினியின் கதையும் பார்வையாளர்களால் விரும்பப்படுவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அசைக்க முடியாத அன்பிற்கும், ஆதரவிற்கும் நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிளாசிக் சினிமாவை இன்னும் பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.