ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படத்தை 'பயோபிக் படங்கள்' என்று அழைக்கிறோம். எல்லா நடிகர்களும் ஒரு பயோபிக் படத்திலாவது நடித்திருப்பார்கள் அல்லது நடிக்க முயற்சிப்பார்கள். எம்.ஜி.ஆர் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்', சிவாஜி 'கப்பலோட்டிய தமிழன்', ரஜினி 'ராகவேந்திரர்', கமல் வரதராஜ முதலியார் (நாயகன்) இப்படி இந்த பட்டியல் நீளமானது. ஆனால் ஒரு நடிகர் பயோபிக் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவர் 1930 மற்றும் 40களில் வாழ்ந்த தண்டபாணி தேசிகர்.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த இவர் முறைப்படி இசை கற்று தமிழ் இசை அறிஞரானார். தேவார பாடல்களை தெருக்களில் பாடி வந்தார். பின்னர் இசை ஆசிரியர் ஆனார். இவரது பாடல்கள் தஞ்சை மண்டலம் முழுவதும் பிரபலமாக இருந்தது. இதை கேள்விப்பட்டு அவரை சென்னைக்கு அழைத்து வந்து 'பட்டினத்தார்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்கள். அவர் படத்தில் பட்டினத்தார் பாடல்களை பாடி நடித்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு வள்ளாள மகாராஜா, தாயுமானவர், மாணிக்க வாசகர், நந்தனார், திருமழிசை ஆழ்வார் என ஆன்மீக குருக்களின் வாழ்க்கை படத்தில் நடித்தார். பின்னர் சினிமாவை விட்டு விலகிய அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைத் துறை தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி, மறைந்தார்.