வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. உலகமெங்கும் பத்தாயிரம் தியேட்டர்களில் வெளியாகும் இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சூர்யா அளித்த ஒரு பேட்டியில், ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை கனவாகவே இருந்து வருகிறது. அது விரைவில் நனவாகும் என்று எதிர்பார்க்கிறேன். அதேசமயம் அப்படி நாங்கள் இணைந்து நடிக்கும் பட வாய்ப்பு என்பது தானாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எந்த இயக்குனரிடத்திலும் எங்களுக்கேற்ற கதையை உருவாக்குங்கள் என்று நானாக கூற மாட்டேன் என்று கூறியுள்ளார் சூர்யா. மேலும் திருமணத்திற்கு முன்பு சூர்யாவும், ஜோதிகாவும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.