அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் வைரலானது. இதேபோல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீ லீலாவை அணுகினர். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் பாலிவுட் நடிகைகளான த்ரிப்தி டிகிரி, ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது. ஆனால், இவர்கள் பெரும் தொகை சம்பளமாக கேட்பதால் தற்போது இந்த முயற்சியிலிருந்து வெளியேறினர் படக்குழு.
இப்போது மீண்டும் ஸ்ரீலீலாவை அணுகி இந்த பாடலுக்கு நடனம் ஆட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். இன்னும் இந்த ஒரு பாடல் காட்சி ஒன்றும் மட்டும் தான் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.