அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் வைரலானது. இதேபோல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீ லீலாவை அணுகினர். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் பாலிவுட் நடிகைகளான த்ரிப்தி டிகிரி, ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது. ஆனால், இவர்கள் பெரும் தொகை சம்பளமாக கேட்பதால் தற்போது இந்த முயற்சியிலிருந்து வெளியேறினர் படக்குழு.
இப்போது மீண்டும் ஸ்ரீலீலாவை அணுகி இந்த பாடலுக்கு நடனம் ஆட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். இன்னும் இந்த ஒரு பாடல் காட்சி ஒன்றும் மட்டும் தான் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.