பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் திரிஷா. தனது படம் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், தனது சுற்றுப்பயணங்கள் குறித்து அடிக்கடி பதிவு வெளியிடும் திரிஷா அவ்வப்போது வளர்ப்பு பிராணிகள் குறித்தும் பதிவிடுவார். குறிப்பாக தெரு நாய்கள் பற்றி அதிகமாக பதிவிடுவார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு புதிராக இருக்கிறது. பலரும் இதனை ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறார்கள்.அதில் அவர், "நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன். நாய்களை நேசிக்கிறேன். எனது நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் திரிஷா மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார் என்று நெட்டிசன்களும், ரசிகர்களும் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
திரிஷா, தற்போது அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' மற்றும் கமல்ஹாசனுடன் 'தக் லைப்' படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.