''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன், நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, ஊருக்கு உழைப்பவன் இந்த நான்கு படங்களையும் இயக்கியவர் மலையாள இயக்குனர் எம் கிருஷ்ணன் நாயர். இவை அனைத்துமே வெற்றி படங்கள்.
இது தவிர தலைப்பிரசவம், முத்துச்சிப்பி, ஆளுக்கொரு வீடு, மன்னிப்பு, மகனே நீ வாழ்க, குடும்பம் உட்பட மொத்தம் 18 தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 120 படங்களை இயக்கியுள்ளார். 1955ம் ஆண்டு மலையாளத்தில் 'சி.ஐ.டி' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'காவியமேளா' என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
பிரபல இயக்குநர்கள் ஹரிஹரன், எஸ்.பி.முத்துராமன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பிரபல திரைப்பட இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றினார்கள். 2001ம் ஆண்டு 74வது வயதில் காலமானார்.