இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன், நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, ஊருக்கு உழைப்பவன் இந்த நான்கு படங்களையும் இயக்கியவர் மலையாள இயக்குனர் எம் கிருஷ்ணன் நாயர். இவை அனைத்துமே வெற்றி படங்கள்.
இது தவிர தலைப்பிரசவம், முத்துச்சிப்பி, ஆளுக்கொரு வீடு, மன்னிப்பு, மகனே நீ வாழ்க, குடும்பம் உட்பட மொத்தம் 18 தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 120 படங்களை இயக்கியுள்ளார். 1955ம் ஆண்டு மலையாளத்தில் 'சி.ஐ.டி' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'காவியமேளா' என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
பிரபல இயக்குநர்கள் ஹரிஹரன், எஸ்.பி.முத்துராமன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பிரபல திரைப்பட இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றினார்கள். 2001ம் ஆண்டு 74வது வயதில் காலமானார்.