மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2019ல் வெளிவந்த படம் 'கைதி'. சிறந்த விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிதான் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் படத்தையும் இயக்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
அதன் பின் விஜய் நடிப்பில் 'மாஸ்டர், லியோ' படங்களையும் கமல் நடிப்பில் 'விக்ரம்' படத்தையும் இயக்கி, தற்போது ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். 'கைதி' படம் வெளியான பின்பு அதன் இரண்டாம் பாகம் வரும் என்று அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி பேசி வந்தார்கள்.
தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அது தள்ளிக் கொண்டே போய் வருகிறது. “விரைவில் டில்லி திரும்ப வருவார்” என இன்று அப்படத்தின் ஐந்தாவது வருடத்தில் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிருந்துதான் அனைத்தும் ஆரம்பமானது. கார்த்தி சார், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு சார்” ஆகியோருக்கும் இதை நடக்க வைக்கும் 'யுனிவர்ஸுக்கும்' நன்றி,” என்றும் குறிப்பிட்டுள்ளார். 'கைதி' படத்தில் கார்த்தியின் கதாபாத்திரப் பெயர்தான் டில்லி.
எஸ்ஆர் பிரபு தயாரித்த 'மாநகரம்' படம் மூலம்தான் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமானார். 'கூலி' படத்திற்குப் பிறகு 'கைதி 2' படம் உருவாகவும் வாய்ப்புள்ளது.