100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. இப்படம் இன்று 50வது நாளைத் தொட்டுள்ளது.
கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் இப்படம் மாபெரும் வெற்றி என்றில்லாமல் வெற்றி என்று குறிப்பிடும் அளவில்தான் இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் 100 கோடி ரூபாய் பங்குத் தொகையைக் கொடுத்ததால், அதற்காக விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா, வினியோகஸ்தர் ராகுல் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த அளவில் வசூலைப் பெறவில்லை என்பதும் அங்கிருந்த வந்த தகவல்கள்.
அக்டோபர் 3ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் வெளியாகி 20 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் ஓடி வருவது ஆச்சரியம்தான். சென்னையில் 20 தியேட்டர்களில் இப்படம் ஓடிவருவதாக 50வது நாள் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
உலக அளவில் 455 கோடியை வசூலித்ததாக அக்டோபர் 9ம் தேதி இப்படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் வசூல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.




