ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

ஒரு சில நடிகைகள் மட்டுமே பிரபல நாவல் கதைகளில் நடித்துள்ளனர். லட்சுமி, சாரதா, சரிதா இப்படி ஒரு சில நடிகைகளை குறிப்பிடலாம். ஜெயலலிதாவும் ஒரு சில நாவல்கதைகளில் நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது 'நதியை தேடி வந்த கடல்'. பிரபல எழுத்தாளர் மகரிஷி எழுதிய நாவல் அதே தலைப்பில் படமானது.
இதில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக சரத்பாபு நடித்திருந்தார். படாபட் ஜெயலட்சுமி. ஸ்ரீகாந்த், மாஸ்டர் சேகர், ஜமீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதியிருந்தார். முன்னணி எடிட்டரான பி.லெனின் இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்கு முன்பு ஜெயலலிதா நடித்த 'மாற்றான் தோட்டத்து மல்லிகை', 'மணிப்பூர் மாமியார்' படங்கள் வெளியாகவில்லை. அதனால் இதுவே ஜெயலலிதாவுக்கு கடைசி படமானது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 'தவிக்குது தவிக்குது ஒரு மனது..' என்ற பாடல் இப்போதும் தேன் சொட்டும் பாடலாக ரசிக்கப்படுகிறது. அதில் ஜெயலலிதா ஆடியிருக்கும் நடனமும் மனதை கொள்ளை கொள்ளும்.