ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தற்போது ஆன்லைன் மோசடிகள் பெரிய அளவில் கோடிக் கணக்கில் நடந்து வருகிறது. அவற்றில் ஒன்றாக 'எச்.பி.இசட் டோக்கன்' என்ற செல்போன் செயலி மூலம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் அதிக அளவில் முதலீடுகளை பெற்று மோசடி செய்யப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நாகாலாந்து மாநிலத்தின் கோகிமா பகுதி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடந்த மார்ச் மாதம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். 'எச்.பி.இசட் டோக்கன்' செல்போன் செயலி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா பங்கேற்றார். இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் பணம் பெற்றுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அசாமின் கவுகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேற்று தமன்னா ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் தமன்னாவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
விசாரணையில் அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பணம் பெற்றதை ஒப்புக்கொண்ட தமன்னா அது மோசடி நிறுவனம் என்று அப்போது தனக்குத் தெரியாது என்றும், தேவைப்பட்டால் அந்த பணத்தை திருப்பி ஒப்படைப்பதாகவும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.