‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்து வரும் இந்த படத்தில் சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இந்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார், பிரசன்னா இணைந்து நடித்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், இதுபோன்ற தவறான வேலைகளில் யாரும் ஈடுபடாதீர்கள் என்று ஒட்டுமொத்த பட குழுவுக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, செக்யூரிட்டியை பலப்படுத்தி உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை வேகமாக நடத்தி வரும் ஆதிக் ரவிச்சந்திரன் இன்னும் ஒரே மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லியை வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறார்.