ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஏழு சீசன்களாகத் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து இந்த எட்டாவது சீசனைத் தொகுத்து வழங்கவில்லை என விலகினார். அவருக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நேற்று 'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சி ஆரம்பமானது.
கமல்ஹாசனைப் போல விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா, நிகழ்ச்சியின் போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்வார், சமாளிப்பார் என்ற கேள்வி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பு எழுந்தது. ஆனால், நேற்று நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பான பின் பல ரசிகர்கள் விஜய் சேதுபதிக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
போட்டியாளர்களுடனான அறிமுகத்திலேயே விஜய் சேதுபதியின் உரையாடல் யதார்த்தமாகவும், சிறப்பாகவும் இருந்தது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதில் ஒரு தற்பெருமை இருக்கும், ஆனால், விஜய் சேதுபதியின் பேச்சில் அது இல்லை என்பது சிறப்பானது எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் சில கமல் ரசிகர்கள் கமல்ஹாசனை விட்டுக் கொடுக்காமல் அவருடைய தொகுப்பே தனி என புகழ் பாடி வருகிறார்கள்.
ஒரு நாள்தான் கடந்துள்ளது, இன்னும் 100 நாட்களுக்கு மேல் போக வேண்டும். வரும் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடிவிட்டல், அவர் கமல்ஹாசனின் இடத்தை நிரப்புகிறாரோ இல்லையோ தனி பாணியை உருவாக்க வாய்ப்புள்ளது.