மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஏழு சீசன்களாகத் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து இந்த எட்டாவது சீசனைத் தொகுத்து வழங்கவில்லை என விலகினார். அவருக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நேற்று 'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சி ஆரம்பமானது.
கமல்ஹாசனைப் போல விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா, நிகழ்ச்சியின் போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்வார், சமாளிப்பார் என்ற கேள்வி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பு எழுந்தது. ஆனால், நேற்று நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பான பின் பல ரசிகர்கள் விஜய் சேதுபதிக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
போட்டியாளர்களுடனான அறிமுகத்திலேயே விஜய் சேதுபதியின் உரையாடல் யதார்த்தமாகவும், சிறப்பாகவும் இருந்தது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதில் ஒரு தற்பெருமை இருக்கும், ஆனால், விஜய் சேதுபதியின் பேச்சில் அது இல்லை என்பது சிறப்பானது எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் சில கமல் ரசிகர்கள் கமல்ஹாசனை விட்டுக் கொடுக்காமல் அவருடைய தொகுப்பே தனி என புகழ் பாடி வருகிறார்கள்.
ஒரு நாள்தான் கடந்துள்ளது, இன்னும் 100 நாட்களுக்கு மேல் போக வேண்டும். வரும் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடிவிட்டல், அவர் கமல்ஹாசனின் இடத்தை நிரப்புகிறாரோ இல்லையோ தனி பாணியை உருவாக்க வாய்ப்புள்ளது.