மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த படம் 'டாடா'. இப்படம் வெற்றி பெற்றது தொடர்ந்து அடுத்து இவர் ஜீவா, துருவ் விக்ரம் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான முயற்சிகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் கணேஷ் கே பாபு அடுத்து நடிகர் ஜெயம் ரவியை வைத்து தான் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே முடிந்துவிட்டன. அடுத்து அவர் தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தனி ஒருவன் 2விற்கு முன்பே கணேஷ் கே பாபு படத்தில் நடிப்பார் என தெரிகிறது.