10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு |
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சான கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் 'லப்பர் பந்து'.
இப்படத்தில் இளையராஜாவின் இசையில் விஜயகாந்த் நடித்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' என்ற பாடலைப் பயன்படுத்தி இருந்தனர். படத்தின் நாயகன் தினேஷ் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அந்தப் பாடல் ஒலித்தது. படத்தின் ரசிப்புத்தன்மைக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது.
இந்நிலையில் படக்குழுவினரால் கடந்த வாரம் மறைந்த விஜயகாந்த் குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தற்போது இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். அவரது இசையில் உருவாகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கு தொடர்வதும் சிலர் சர்ச்சையாக்கி வந்தனர்.
இளையராஜாவிடம் உரிய அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்திய படக்குழுவினர் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்தித்தது இளையராஜா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. படத் தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர்கள் தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் இளையராஜாவை சந்தித்தனர்.