தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சான கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் 'லப்பர் பந்து'.
இப்படத்தில் இளையராஜாவின் இசையில் விஜயகாந்த் நடித்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' என்ற பாடலைப் பயன்படுத்தி இருந்தனர். படத்தின் நாயகன் தினேஷ் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அந்தப் பாடல் ஒலித்தது. படத்தின் ரசிப்புத்தன்மைக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது.
இந்நிலையில் படக்குழுவினரால் கடந்த வாரம் மறைந்த விஜயகாந்த் குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தற்போது இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். அவரது இசையில் உருவாகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கு தொடர்வதும் சிலர் சர்ச்சையாக்கி வந்தனர்.
இளையராஜாவிடம் உரிய அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்திய படக்குழுவினர் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்தித்தது இளையராஜா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. படத் தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர்கள் தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் இளையராஜாவை சந்தித்தனர்.