டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

1950களில் திராவிட இயக்கத் தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது சீர்திருத்த திருமணம். இதற்கு கடும் எதிர்ப்பும் இருந்தது. இந்த காலகட்டத்தில் சீர்திருத்த திருமணத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த படம் தான் 'வாழ்க்கை ஒப்பந்தம்'. ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, டாம் எவல் நடித்த 'தி செவன் இயர் இட்ச்' என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவான படம்.
இந்த படத்தை தயாரிக்க அப்போதிருந்த பல ஸ்டூடியோக்கள் முன்வராதபோது இயக்குனர் கே.வி.ரெட்டி. ஜெயந்தி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தானே தயாரித்து, இயக்கினார். தமிழில் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'பெல்லினாட்டி பிரமனாலு' என்ற பெயரிலும் தயாரானது. தெலுங்கில் பெரிய வெற்றியும், தமிழில் சுமாரான வெற்றியும் பெற்றது.
நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்தார். ஜமுனா, நாயகி. கே.சாரங்கபாணி, ராஜசுலோச்சனா, எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி உட்பட பலர் நடித்தனர். பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ், கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். கண்டசாலா இசையமைத்த இந்த படத்துக்குப் பாடல்களை, தஞ்சை ராமையா தாஸ் எழுதியிருந்தார். சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இந்த படம் பேசியது.