கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலுக்கு வரப்போகிறார். இதன் காரணமாக அடுத்தபடியாக விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்கிற கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றபோது, அது குறித்து ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அப்போது அவரை நோக்கி அடுத்த தளபதி நீங்கள்தான் என்று ரசிகர்கள் கூறியபோது, அதை மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவில் ஒரே ஒரு தளபதி தான், ஒரே ஒரு தல தான், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், ஒரே ஒரு உலக நாயகன் தான். அதனால் அடுத்த என்ற பேச்சுக்கே இடமில்லை. இவர்களெல்லாம் நடிப்பதை பார்த்து தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அதனால் அவர்களை போன்று நாமும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் அவர்களாகவே ஆக வேண்டும் என்று நினைப்பது சரி கிடையாது. அது தவறு என்று நான் நினைக்கிறேன்,'' என கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.