'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலுக்கு வரப்போகிறார். இதன் காரணமாக அடுத்தபடியாக விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்கிற கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றபோது, அது குறித்து ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அப்போது அவரை நோக்கி அடுத்த தளபதி நீங்கள்தான் என்று ரசிகர்கள் கூறியபோது, அதை மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவில் ஒரே ஒரு தளபதி தான், ஒரே ஒரு தல தான், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், ஒரே ஒரு உலக நாயகன் தான். அதனால் அடுத்த என்ற பேச்சுக்கே இடமில்லை. இவர்களெல்லாம் நடிப்பதை பார்த்து தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அதனால் அவர்களை போன்று நாமும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் அவர்களாகவே ஆக வேண்டும் என்று நினைப்பது சரி கிடையாது. அது தவறு என்று நான் நினைக்கிறேன்,'' என கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.