துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழில் கடந்த 2000ம் ஆண்டில் காதல் ரோஜாவே என்ற படத்தில் அறிமுகமானவர்தான் பூஜா குமார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த பூஜாகுமார், அதையடுத்து உத்தம வில்லன், மீன்குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் நடித்தார். ஆங்கிலம் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
1999ம் ஆண்டு விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட பூஜா குமாருக்கு 2020ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தேசிய மகள் நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து தனது மகளுடன் தான் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் பூஜா குமார் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், மகளைப் பெற்றிருக்கும் அனைவருக்கும் தேசிய மகளிர் நாள் வாழ்த்துக்கள். இந்த அற்புதமான பெண்ணை பெற்ற நான் அதிர்ஷ்டசாலி . அவரை வளர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உன்னை சந்திரனுக்கு அப்பாற்பட்ட அளவுக்கு நேசிக்கிறேன். வாழ்க்கை என்ற விளையாட்டில் நீ வெற்றி பெற உனது அனைத்து தேவைகளையும் நான் அளிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் பூஜா குமார்.