ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கி திரைக்கு வந்த படம் 96. காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு, விஜய் சேதுபதி - திரிஷாவின் கேரியரில் முக்கியமான படமாகவும் அமைந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் பிரேம்குமார். இந்த படம் செப்டம்பர் 27ம் தேதி நாளை திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம்குமாரிடம் ‛96' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‛‛96 படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட கதையில் உருவானது. ஆனால் அப்படத்தின் இரண்டாம் பாகம் காதல் இல்லாமல் குடும்ப பிரச்னைகளை மையமாகக் கொண்ட உணர்வு பூர்வமான ஒரு கதையில் உருவாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.




