அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'மதுரவீரன்' என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்தார், அந்த படம் வெளிவரவில்லை. தற்போது யானை பாகனாக 'படைத் தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி.செல்லையா தயாரிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். புதுமுகம் தார்னிகா நாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது “கிராமத்து பின்னணியில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது. தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது” என்றார்.