சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வந்த ரச்சிதா மகாலெட்சுமி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதற்கேற்றார்போல் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரச்சிதா தற்போது தெலுங்கில் 'தள்ளி மனசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சின்னத்திரையை போலவே வெள்ளித்திரையிலும் ரச்சிதா சாதிக்க வேண்டும் என பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.