என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. வரும் அக்., 10ம் தேதி படம் வெளியாக உள்ளதால் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 20) மாலை நடைபெற இருக்கிறது. இதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார் ரஜினி.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொள்ள, ‛‛வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. கூலி படப்பிடிப்பு சிறப்பாக போகிறது'' என்றார்.
தொடர்ந்து அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்க சற்றே டென்ஷனான ரஜினி, ‛‛அரசியல் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்'' என கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.