நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. வரும் அக்., 10ம் தேதி படம் வெளியாக உள்ளதால் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 20) மாலை நடைபெற இருக்கிறது. இதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார் ரஜினி.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொள்ள, ‛‛வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. கூலி படப்பிடிப்பு சிறப்பாக போகிறது'' என்றார்.
தொடர்ந்து அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்க சற்றே டென்ஷனான ரஜினி, ‛‛அரசியல் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்'' என கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.