இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. வரும் அக்., 10ம் தேதி படம் வெளியாக உள்ளதால் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 20) மாலை நடைபெற இருக்கிறது. இதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார் ரஜினி.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொள்ள, ‛‛வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. கூலி படப்பிடிப்பு சிறப்பாக போகிறது'' என்றார்.
தொடர்ந்து அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்க சற்றே டென்ஷனான ரஜினி, ‛‛அரசியல் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்'' என கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.