வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
நடிகர் தனுஷ் தற்போது ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் தேனியில் சத்தமின்றி துவங்கி நடந்து வருகிறது.
இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் எனும் தயாரிப்பாளர் தனது 'டாவுன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் முதல் படமாக தயாரிக்கின்றார். இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு 'இட்லி கடை' என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.