‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இந்தியாவில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி. இந்தியாவில் உயர்ந்து விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். 'மீரா' என்ற படத்தில் மீராவாக நடித்தவர். இவரது வாழ்க்கை கதை சினிமாவாக தயாராகிறது. இதில் எம்எஸ் சுப்புலட்சுமியாக வித்யா பாலன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அவரது வாழ்க்கை மேடை நாடகமாக உருவாகிறது.
எழுத்தாளர் வி.எஸ்.வி.ரமணன் எழுதிய 'காற்றினிலே வரும் கீதம்' புத்தகத்தை தழுவி அதே பெயரில் இந்த நாடகம் உருவாகியுள்ளது. இதை பம்பாய் ஞானம் இயக்குகிறார். தக்ஷின் இசையமைக்கிறார். த்ரீ நிறுவனம் மற்றும் கஸ்தூபா மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நாடகம் வரும் செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் வாணி மகால் மற்றும் நாரத கான சபையில் நடைபெற உள்ளது. சுப்புலட்சுமியாக நாடக நடிகை லாவண்யா நடிக்கிறார்.




