கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
விஜய் நடித்திருக்கும் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரப்போகிறது. இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், நான்காவது பாடல் இன்று(ஆக., 31) வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல்களை விஜய் பாடியுள்ள நிலையில், ஒரு பாடலை மறைந்த பாடகி பவதாரணி உடன் இணைந்து பாடியிருந்தார். பவதாரணிக்காக ஏஐ தொழில் நுட்பம் பயன்படுத்தபட்டது. மேலும், முதல் மூன்று பாடல்களும் பெரிதாக ஹிட் அடிக்காத நிலையில், இன்று வெளியாகும் நான்காவது பாடலாவது ஹிட் அடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் இந்த கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்தின் கதையை விஜய் இடத்தில் சொன்ன போது இசை அமைப்பாளர் குறித்து நான் எதுவும் பேசவில்லை. பின்னர் விஜய்தான், வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா காம்பினேஷன் சிறப்பாக இருக்குமே என்று சொல்லி யுவன் சங்கரை இசையமைப்பாளராக புக் பண்ணுமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார்.