மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மலையாள சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லைகள் குறித்த தகவல் வெளியாகத் தொடங்கியுள்ளது. ரியாஸ்கான் மீது புதிதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் நடிகையும், சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி 'சின்னத்திரையிலும் பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் குழந்தை நட்சத்திரங்களும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக' கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பதை போல சின்னத்திரையிலும் அதிகமாக உள்ளது. இதனால் பல நடிகைகள் தற்கொலைக்கு முயன்று உள்ளார்கள். டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி. துறை போன்று சினிமாவும் ஒரு தொழில்தான். இதனை ஏன் உடல் வியாபாரமாக மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. இது மிகவும் தவறானது.
தமிழ் டிவி சீரியல்களில் நடிகைகளிடமிருந்து இயக்குனர்களும் டெக்னீஷியன்களும் பாலியல் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க முடியாததால் பல பெண்கள் புகார் செய்ய முன்வருவதில்லை. அதேபோல், சில பெண்கள் நன்றாக சம்பாதிப்பதால் துன்புறுத்தலை பொறுத்துக் கொள்கிறார்கள். அதையும் மீறினால் நடிகைகளுக்கு தடை செய்யப்படும் சம்பவமும் நிகழ்கிறது.
சின்மயிக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தேன். ஆனால் அவரை நடிகர் ராதாரவி சங்கத்தில் இருந்து நீக்கினார். ஸ்ரீரெட்டிக்கு உறுப்பினர் அட்டை கூட கொடுக்கப்படவில்லை. இதனால் அவரால் சீரியல்களில் நடிக்க முடியாத நிலை உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டால் எப்படி கொடுப்பது. வேண்டும் என்றால், சிபிஐ மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம்.
குழந்தையாக நடிக்கும்போது கூட பாலியல் தொல்லை தருகிறார்கள். நான் குழந்தையாக நடிக்கும்போது இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டேன். என் அம்மாவிடம் சொல்லி இந்த பிரச்னையை எழுப்பியபோது 75 சதவீதம் முடிந்த இந்தி படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.