வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கோட். செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில் கோட் படத்தின் கதை குறித்து கூறும் போது, இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே சொல்லி விட்டேன். என்றாலும் அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அதோடு இந்த படத்தின் காட்சிகள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திரைக் கதையை உருவாக்கி இருக்கிறேன். அஜித் நடிப்பில் நான் இயக்கிய மங்காத்தா துரோகத்தை வெளிப்படுத்தும் கதையில் உருவாகியிருந்தது. ஆனால் இந்த கோட் படத்தை காந்தி என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த ஒரு குடும்ப கதையில் உருவாக்கி இருக்கிறேன். மங்காத்தா படத்தை விட இந்த கோட் படம் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு.