Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சார்பட்டா பரம்பரைக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? - பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல்

25 ஆக, 2024 - 01:14 IST
எழுத்தின் அளவு:
Why-didnt-Sarbhata-Parampara-get-a-national-award---Information-published-by-Pa.-Ranjit

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களுக்கு பிறகு ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 2021ம் ஆண்டு நேரடியாகவே ஓடிடி.,யில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக்கள் நிலவின. ஆனால் எதிர்பார்த்தபடி விருது கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அது குறித்து பா.ரஞ்சித் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛சார்பட்டா பரம்பரை படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அதேசமயம் படத்தின் இரண்டாம் பகுதி சரி இல்லை என்று சிலர் விமர்சனம் செய்தார்கள். சில விழாக்களில் கிரிட்டிக்ஸ் பிரிவில் சார்பட்டா பரம்பரை பல விருதுகளை பெற்றுள்ளது. இந்த விருதை பெற்றால் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும். ஆனபோதும் சார்பட்டா பரம்பரை படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. காரணம் திட்டமிட்டு சிலர் எனது வேலையை மதிக்கக்கூடாது என்று புறக்கணிக்கிறார்கள். என் மீதான வெறுப்பை தான் இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது'' என்று தெரிவித்திருக்கிறார் பா. ரஞ்சித்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் படத்தின் ‛முதல் சிங்கிள்': அப்டேட் வெளியிட்ட ஜி.வி .பிரகாஷ் குமார்!தனுஷ் படத்தின் ‛முதல் சிங்கிள்': ... தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை: பிரேமலதா திறந்து வைத்தார் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

25 ஆக, 2024 - 07:08 Report Abuse
N Sasikumar Yadhav எப்போது பார்த்தாலும் ஒரு ஜாதியை உயர்த்தி மற்ற ஜாதிகளை வில்லன் மாதிரி சித்தரித்து நசுக்கிட்டாங்க பிதுக்கிட்டாங்க என ஒப்பாரி வைத்தால் விருது எப்படி கிடைக்கும் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)