போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
'கஸ்டடி' நடிகரான நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகையான சோபிதா துலிபலா இருவருக்கும் அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை சமந்தாவுடனான திருமண உறவை முறித்துக் கொண்ட பின் நாக சைதன்யா, சோபிதாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்தன. அதை அவர்களது நிச்சயதார்த்தம் உறுதி செய்தது.
இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. திருமணத்தை நீண்ட நாட்கள் தள்ளி வைக்க இருவரது குடும்பத்தினரும் விரும்பவில்லையாம். திருமண நிச்சயத்திற்குப் பிறகு மும்பையில் சோபிதா சென்ற போது அவரைப் புகைப்படமெடுத்த கலைஞர்கள் 'எப்போது பார்ட்டி' எனக் கேட்டுள்ளனர், அதற்கு விரைவில் என பதிலளித்துள்ளார் சோபிதா.
'டெஸ்டினேஷன்' திருமணமாக நடக்குமா அல்லது ஐதராபாத்தில் திருமணம் நடக்குமா என்பதும் விரைவில் தெரிந்துவிடும். நாக சைதன்யா, சமந்தாவின் திருமணம் 'டெஸ்டினேஷன்' திருமணமாக கோவாவில் நடைபெற்றது. அதனால், நாக சைதன்யா, சோபிதா திருமணம் ஹைதராபாத்தில் தான் நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.