இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் சினிமாவில் அடுத்த நான்கு மாதங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தி கோட், மெய்யழகன், கங்குவா, வேட்டையன், அமரன், விடாமுயற்சி,' என அடுத்தடுத்து சில பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.
அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்', சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படங்கள் நேரடியாக மோத உள்ளன. இந்தப் போட்டியிலிருந்து 'கங்குவா' விலகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். அப்படி விலகாவிட்டால் போட்டி உறுதி.
தற்போது அதிகமான இளம் ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களுடன் போட்டி போடுவது என சீனியர் நடிகரான ரஜினிகாந்த் முடிவெடுத்துவிட்டார் என்றே திரையுலகில் சொல்கிறார்கள். வயசானாலும் தனக்கான வரவேற்பு குறையவில்லை என்பதை அவர் சொல்ல விரும்புகிறார் என்பதும் பேச்சாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு 'வேட்டையன்' பட ரிலீஸ் பற்றிய அப்டேட் வந்தது. அடுத்து முதல் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் பற்றிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத் கொடுத்துள்ளார். விரைவில் அப்பாடல் வெளியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் விஜய்யின் 'தி கோட்' படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே 'வேட்டையன்' முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தான் இசையமைத்த 'இந்தியன் 2' பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காத காரணத்தாலும் 'மனசிலாயோ' பாடலை அனிருத் அதிரடியாய் இசையமைத்திருப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், யுவன் இசையில் வந்த 'தி கோட்' படத்தின் பாடல்களை மிஞ்சும் விதத்தில் 'வேட்டையன்' பாடல்கள் அமைந்து சாதனை புரிய வேண்டும் என்பதும் அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.