மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாடகி பி. சுசீலா வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இசையரசி P.சுசீலாம்மா , சிகிச்சைக்கு பின் இப்போது நலமாக வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து பி.சுசீலா வெளியிட்டுள்ள வீடியோவில், காவேரி மருத்துவமனையில் மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் ,செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் காட்டிய பாசத்திற்கும் அக்கறைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
நான் நலம் பெற பிரார்த்தனை செய்த கோடானுகோடி அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் பி.சுசீலா தெரிவித்துள்ளார்.