மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜாவும் நகரி தொகுதியில் தோல்வி அடைந்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்தியதில் ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11ம் தேதி புகார் மனு அனுப்பினார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டது.
தற்போது இந்த விசாரணை தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து ரோஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் ரோஜா கைதாகும் வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. முதல் கட்டமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரோஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட இருப்பதாக தெரிகிறது.