அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜாவும் நகரி தொகுதியில் தோல்வி அடைந்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்தியதில் ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11ம் தேதி புகார் மனு அனுப்பினார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டது.
தற்போது இந்த விசாரணை தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து ரோஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் ரோஜா கைதாகும் வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. முதல் கட்டமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரோஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட இருப்பதாக தெரிகிறது.