தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள், பிரம்மாண்டப் படங்கள் வெளியாகும் போது அந்தப் படங்களுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை டிக்கெட் கட்டணங்களை தியேட்டர்களில் உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது.
மற்ற நாட்களில் உள்ள வழக்கமான கட்டணங்களை விடவும் சிங்கிள் தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஆகியவற்றிற்கு கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கிறது. ஒவ்வொரு முறை புதிய படங்கள் வெளியாகும் போது தயாரிப்பாளர்கள் அதற்கு மனு அளிப்பதும், அரசு அதை பரிசீலித்து உயர்த்திக் கொள்ள ஆணை பிறப்பிப்பதும் வழக்கமாக இருக்கிறது.
டிக்கெட் கட்டணங்கள் உயர்வதால் புதிய படங்களைப் பார்க்க ரசிகர்கள் தயங்குகிறார்கள் என்ற ஒரு கருத்தும் எழுந்துள்ளது. சில படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் அதிகக் கட்டணம் என்றாலும் வருகிறார்கள், மற்ற படங்களுக்கு வருவதில்லை என்கிறார்கள்.
எனவே, நிரந்தரமாக இதில் ஒரு மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு முடிவெடுத்துள்ளதாம். இது குறித்து ஆந்திர மாநில சினிமாட்டோகிராபி அமைச்சர் கண்டுலா துர்கேஷ் இன்று திரைப்படப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தயாரிப்பாளர்களும், தியேட்டர்களுக்குப் படம் பார்க்க வரும் ரசிகர்களும் பாதிக்கப்படாத வகையில் கட்டணத்தில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.