மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
அந்தக்கால காமெடி நடிகர்களில் ஒருவர் டி.எஸ்.துரைராஜ். பாய்ஸ் நாடக குழுவில் இருந்த அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் பிரபலமான நடிகராக முடியவில்லை. என்றாலும் திருநீல கண்டர், சகுந்தலை படங்களில் இவரது காமெடி நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.
ஒரு கட்டத்தில் 'மரகதா பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் ஏமாற்றம் தந்ததால் கடும் பொருளாதார சிக்கலில் மாட்டினார். இறுதியாக தானே ஒரு படத்தை தயாரித்து இயக்கினார். அதுதான் 'பானை பிடித்தவன் பாக்கியசாலி'.
இந்த படத்தில் சோலோ ஹீரோயினாக சாவித்ரி நடித்தார். அவருடன் டி.எஸ்.துரைராஜ், கே.பாலாஜி, ஆர்.நாகேஸ்வரராவ், டி.பி.முத்துலட்சுமி, வி.எஸ்.ராகவன், அங்கமுத்து உள்பட பலர் நடித்திருந்தார்கள். கமல்கோஷ் என்கிற வங்க மொழி ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1958ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. டி.எஸ்.துரைராஜ் தனது பொருளாதார சிக்கலை தீர்த்தார்.