மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அந்தக்கால காமெடி நடிகர்களில் ஒருவர் டி.எஸ்.துரைராஜ். பாய்ஸ் நாடக குழுவில் இருந்த அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் பிரபலமான நடிகராக முடியவில்லை. என்றாலும் திருநீல கண்டர், சகுந்தலை படங்களில் இவரது காமெடி நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.
ஒரு கட்டத்தில் 'மரகதா பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் ஏமாற்றம் தந்ததால் கடும் பொருளாதார சிக்கலில் மாட்டினார். இறுதியாக தானே ஒரு படத்தை தயாரித்து இயக்கினார். அதுதான் 'பானை பிடித்தவன் பாக்கியசாலி'.
இந்த படத்தில் சோலோ ஹீரோயினாக சாவித்ரி நடித்தார். அவருடன் டி.எஸ்.துரைராஜ், கே.பாலாஜி, ஆர்.நாகேஸ்வரராவ், டி.பி.முத்துலட்சுமி, வி.எஸ்.ராகவன், அங்கமுத்து உள்பட பலர் நடித்திருந்தார்கள். கமல்கோஷ் என்கிற வங்க மொழி ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1958ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. டி.எஸ்.துரைராஜ் தனது பொருளாதார சிக்கலை தீர்த்தார்.