மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், ரஜினிகாந்தும் 25 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். ரஜினிகாந்த் கமர்ஷியல் ஹீரோவாக உருவாவதற்கு எஸ்.பி.முத்துராமன் பெரிய காரணமாக இருந்தார். ஒரு நாள் எஸ்.பி.முத்துராமனை ரஜினி அழைத்து “என்னுடைய வளர்ச்சிக்கு பெரிய துணையா இருந்தீங்க. நான் பொருளாதாரத்துல பெரிய அளவிற்கு முன்னுக்கு வந்து விட்டேன். ஆனால் நீங்க இன்னும் அப்படியேதான் இருக்கீங்க உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறேன். என்ன வேணுமோ கேளுங்க” என்றார்.
அதற்கு எஸ்.பி.முத்துராமன் “என்னோட முதல் படத்துலேருந்து கடைசி படம் வரைக்கும் என்னோடு ஒரே டீம்தான் வேலை செய்றாங்க. என்னை மாதிரிதான் அவுங்களும் இருக்காங்க. அப்படி நீங்க ஏதாவது செய்றதாக இருந்தா என்னோட டீமுக்கே செய்யணும்” என்றார். அதை ஏற்றுக் கொண்ட ரஜினி, எஸ்.பி.முத்துராமன் குழுவிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படம்தான் 'பாண்டியன்'.
இந்த படத்தின் லாபம், எஸ்.பி.முத்துராமனின் குழுவினருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இதனால் சொந்த வீடு, அடிப்படை வாழ்வாதாரம் கிடைத்தது.