பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரால் 'அட் ஹோம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கொடியேற்று நிகழ்ச்சிக்கு பிறகு அன்று மாலை நடக்கும் விருந்து நிகழ்ச்சியாகும்.
இதில் மூத்த அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், மற்றும் பிற குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜூ கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான ஜனாதிபதியின் அழைப்பை அரசு அதிகாரிகள் அவரை சந்தித்து வழங்கினார்கள்.
சந்தியா ராஜூ தனது முதல் தெலுங்குத் திரைப்படமான 'நாட்டியம்' படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர் . இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்கோ குழுமத் தலைவர் தொழிலதிபர் பி.ஆர். வெங்கட்ராம ராஜாவின் மகள். ஐதராபாத்தில் உள்ள நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமி மற்றும் நிஷ்ரிங்கலாபிலிம்ஸின் நிறுவனராகவும் சந்தியா ராஜூ உள்ளார்.