நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் வடிவேலு நடித்த, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' வாயிலாக, 'கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க...' என்று, பல ஆண்டுகளுக்கு முன் அழைத்தவர் சிம்புதேவன்.
திரைப்படத்தை பார்த்தவர்கள் எல்லாம், சிரித்து உருண்டனர். இதற்கு பிறகு, அறை எண் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி என, வேறு பாதையில் பயணிக்க துவங்கினார்.
இவரது சமீபத்திய 'போட்' பயணம், மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அந்த மகிழ்ச்சியோடு, கோவையில் ஒரு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், இவரும், படத்தில் நடித்த சிலரும் பங்கேற்றனர்.
''கடலில் படம் பிடிப்பது, ஒரு சவாலான காரியம் தான். பத்து பேர் பயணிக்கக் கூடிய சிறிய படகில் கதை நடக்கிறது. படக்குழுவினர் மற்றொரு படகில் இணையாக நிறுத்தப்பட்டனர். கேமராவை எப்படி அமைத்தாலும், அது அசைந்து கொண்டே இருக்கும். அதற்கு மேல், எங்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது. இதையெல்லாம் தாண்டி, மறக்க முடியாத அனுபவமாக படம் அமைந்திருக்கிறது,'' என்று பேசினார் சிம்புதேவன்.
நடிகை கவுரி கிஷன் பேசுகையில், '' நான் நடித்த '96' படத்துக்கு பின், நிறைய வித்தியாசமான படங்கள் அமைகின்றன. இப்படம், அனைவருக்கும் பிடிக்கும்,'' என்றார்.