விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் |
நடிகர் வடிவேலு நடித்த, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' வாயிலாக, 'கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க...' என்று, பல ஆண்டுகளுக்கு முன் அழைத்தவர் சிம்புதேவன்.
திரைப்படத்தை பார்த்தவர்கள் எல்லாம், சிரித்து உருண்டனர். இதற்கு பிறகு, அறை எண் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி என, வேறு பாதையில் பயணிக்க துவங்கினார்.
இவரது சமீபத்திய 'போட்' பயணம், மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அந்த மகிழ்ச்சியோடு, கோவையில் ஒரு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், இவரும், படத்தில் நடித்த சிலரும் பங்கேற்றனர்.
''கடலில் படம் பிடிப்பது, ஒரு சவாலான காரியம் தான். பத்து பேர் பயணிக்கக் கூடிய சிறிய படகில் கதை நடக்கிறது. படக்குழுவினர் மற்றொரு படகில் இணையாக நிறுத்தப்பட்டனர். கேமராவை எப்படி அமைத்தாலும், அது அசைந்து கொண்டே இருக்கும். அதற்கு மேல், எங்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது. இதையெல்லாம் தாண்டி, மறக்க முடியாத அனுபவமாக படம் அமைந்திருக்கிறது,'' என்று பேசினார் சிம்புதேவன்.
நடிகை கவுரி கிஷன் பேசுகையில், '' நான் நடித்த '96' படத்துக்கு பின், நிறைய வித்தியாசமான படங்கள் அமைகின்றன. இப்படம், அனைவருக்கும் பிடிக்கும்,'' என்றார்.