ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலா இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமண நிச்சயம் நடந்தது. நாகார்ஜூனா அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அதற்குப் பின் நேற்று நாக சைதன்யா, சோபிதா இருவரும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான 'குறுந்தொகை' பாடல் ஒன்றின் எளிமையான ஆங்கில மொழியாக்கத்தைப் பதிவிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளனர்.
“எனது அம்மா உனக்கு என்னவாக இருக்க முடியும்?, எனது தந்தை உனக்கு என்ன உறவினர்?, நீயும் நானும் எப்படி சந்தித்தோம்? ஆனால், காதலில் எங்கள் இதயங்கள் செம்மண் பூமி மற்றும் மழைநீர் போல் இணைந்துவிட்டன” என்று பதிவிட்டுள்ளனர்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
என்பது அந்த பாடல்... இதன் அர்த்தம்...
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர்?
நானும் நீயும் எப்படி அறிந்தோம்?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே.
வேறு மொழி இலக்கிய மேற்கோள்கள், வெளிநாடுகளில் யாரோ சொன்ன மேற்கோள்களைப் பதிவிடுபவர்களுக்கு மத்தியில் 'குறுந்தொகை' பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளனர் நாகசைதன்யா, சோபிதா.