மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் சசிகுமார். சசிக்குமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து சசிக்குமார் நடித்துள்ள ப்ரீடம் ஆகஸ்ட் 14 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வலைதளத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சசிகுமார். அதன் உடன், ‛‛எங்க வயலில் நடவு. வயலும் வாழ்வும்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின. மதுரையை சேர்ந்த சசிகுமார் தனது சொந்த ஊரில் விவசாய நிலங்கள் வைத்துள்ளார். அதில் விவசாயமும் செய்து வருகிறார்.