நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பிரியா பவானி சங்கர் வலம் வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி உடன் ‛டிமான்டி காலனி 2' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தபடம் அடுத்தவாரம் ஆக., 15ல் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‛ரத்னம், இந்தியன் 2' ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததுடன் அவரின் நடிப்பு பற்றியும் நிறைய கேலி, கிண்டல் வலைதளங்களில் வந்தன.
இதுபற்றி அவர் கூறுகையில் ‛‛சிரித்துக் கொண்டே ஒருவரை திட்டுவது எப்படி என எனக்கு புரியவில்லை. ஒருவரை அதிர்ஷ்டமில்லாதவர் என கூறுவது சரியானது அல்ல. அது அவரையும், அவரை பெற்றவர்களையும் பாதிக்கும். படங்கள் சரியாக போகவில்லை என ஹீரோவை பார்த்து யாராவது அதிர்ஷ்டமில்லாதவர் என கூறியது உண்டா. இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தான். பெரிய படங்கள் எனக்கு அதிர்ஷ்டத்தால் வரவில்லை, திறமையால் வந்தது'' என்றார் பிரியா பவானி சங்கர்.