டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

தமிழ் சினிமாவில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலும் மலையாள நடிகைகள் சில சிறப்பான படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழைப் பெறுகிறார்கள். தமிழில் மற்ற மொழி நடிகைகளின் ஆதிக்கம்தான் அதிகம் என்றாலும், மலையாள நடிகைகளின் படங்கள் தேர்வு ஆச்சரியமளிக்கும்.
அவர்கள் நடிகர் யார், தயாரிப்பு நிறுவனம் யார் என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என்றால் அதில் நடிப்பதற்கு முன் வருவார்கள். அப்படியான நடிகையர் இப்போதும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.
'வாழை' படத்தில் நடித்துள்ள நிகிலா விமல், 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ள அன்னா பென் ஆகியோர் இதற்கு சமீபத்திய உதாரணம். நிகிலா, அன்னா பொன் ஆகியோர் அவர்களது படங்களில் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் படம் வெளிவந்த பின் அவர்களைப் பற்றிப் பேச வைக்கும் என படக்குழுவினர் சொல்கிறார்கள். தமிழக கிராமத்துப் பெண்களாகவே அவர்கள் மாறியுள்ளார்கள் என படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகிறது என்பது கூடுதல் சிறப்பு.