மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலும் மலையாள நடிகைகள் சில சிறப்பான படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழைப் பெறுகிறார்கள். தமிழில் மற்ற மொழி நடிகைகளின் ஆதிக்கம்தான் அதிகம் என்றாலும், மலையாள நடிகைகளின் படங்கள் தேர்வு ஆச்சரியமளிக்கும்.
அவர்கள் நடிகர் யார், தயாரிப்பு நிறுவனம் யார் என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என்றால் அதில் நடிப்பதற்கு முன் வருவார்கள். அப்படியான நடிகையர் இப்போதும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.
'வாழை' படத்தில் நடித்துள்ள நிகிலா விமல், 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ள அன்னா பென் ஆகியோர் இதற்கு சமீபத்திய உதாரணம். நிகிலா, அன்னா பொன் ஆகியோர் அவர்களது படங்களில் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் படம் வெளிவந்த பின் அவர்களைப் பற்றிப் பேச வைக்கும் என படக்குழுவினர் சொல்கிறார்கள். தமிழக கிராமத்துப் பெண்களாகவே அவர்கள் மாறியுள்ளார்கள் என படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகிறது என்பது கூடுதல் சிறப்பு.