ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதற்கடுத்து தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' ஆகிய படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் சிறுவர்கள் நடித்துள்ள 'வாழை' படம் இந்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது.
அதோடு தற்போது துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் 'பைசன்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்த பின் தனுஷ் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். அதற்கடுத்து கார்த்தி நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
'வா வாத்தியாரே, மெய்யழகன்' ஆகிய படங்களில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். தற்போது 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு 'கைதி 2' படத்தில் நடிக்க உள்ளார். 'கூலி' படத்தை இயக்கி முடித்த பின் லோகேஷ் கனகராஜ் 'கைதி 2' படத்தை இயக்கலாம் எனத் தெரிகிறது.
கார்த்தியிடம் படத்தின் கதையை ஐந்தே நிமிஷத்தில் சொல்லி முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். அதற்கே ஆச்சரியப்பட்ட கார்த்தி ஓகே சொல்லிவிட்டார் எனத் தகவல்.